WhatsApp Channel
மசூதியில் பாதுகாப்புக் பணியில் ஈடுபட்டிருந்த போலிஸார் தேநீர் தயாரித்துக் கொண்டிருந்த போது வாயு கசிவு காரணமாக இந்த விபத்து இடம்பெற்றதாக சிரேஷ்ட போலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார்.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் குவெட்டா நகரில் உள்ள மசூதியில் நேற்று இரவு ஏராளமானோர் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து தீப்பிடித்தது. தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் போலீஸ்காரர் ஒருவர் உயிரிழந்தார். 5 போலீசார் உட்பட 12 பேர் காயமடைந்தனர். அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பள்ளிவாசலில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த போலிஸார் தேநீர் தயாரித்துக் கொண்டிருந்த போது சிலிண்டரில் இருந்து வாயு கசிந்து விபத்து ஏற்பட்டதாக சிரேஷ்ட போலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார்.
Discussion about this post