WhatsApp Channel
மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவிலுக்கு வரும் 24ம் தேதி வரை பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே சதுரகிரியில் பிரசித்தி பெற்ற சுந்தரமகாலிங்க சுவாமி கோவில் உள்ளது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் கோவில் அமைந்துள்ளதால், ஒவ்வொரு மாதமும் அமாவாசை மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு 4 நாட்கள் மட்டுமே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.
அதன்படி, மாசி மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் பிப்., 21 முதல் 24ம் தேதி வரை தினமும் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை பக்தர்கள் சதுரகிரி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
மேலும் சதுரகிரி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு வனத்துறையினர் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இதன்படி 10 வயதுக்குட்பட்டவர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மலை ஏறக் கூடாது, எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்லக் கூடாது, குளிக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை வனத்துறையினர் விதித்துள்ளனர். மலைப்பாதைகளில் ஓடைகள், இரவில் மலைக்கோயிலில் தங்குவதற்கு அனுமதி இல்லை.
இதனிடையே, கனமழை பெய்தால் மலை ஏற அனுமதி ரத்து செய்யப்படும் என தமிழக வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
Discussion about this post