WhatsApp Channel
15 வயது சிறுமியை மிரட்டி கூட்டு பலாத்காரம் செய்த 2 ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.
மும்பை எல்லோகேட்டில் கடலோர காவல்படை அலுவலகம் உள்ளது. இங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவர் அங்குள்ள கடலோர காவல்படை குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது 15 வயது மகள் அங்குள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.
அதே குடியிருப்பில் வசிக்கும் 30 மற்றும் 23 வயதுடைய இரண்டு சக ஊழியர்கள், சிறுமியின் வீட்டாருடன் வந்து பழகுவது வழக்கம். கடந்த ஆண்டு அக்டோபர் 17ம் தேதி சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதையறிந்த 30 வயது ஊழியர், சிறுமியின் வீட்டிற்கு சென்று, தனது மனைவி அழைப்பதாக சிறுமியிடம் கூறியுள்ளார்.
இதை நம்பிய சிறுமி அந்த ஊழியரின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, அங்கிருந்த 23 வயது ஊழியர் திடீரென சிறுமியின் வாயைக் கட்டி வீட்டில் உள்ள அறைக்கு இழுத்துச் சென்றுள்ளார். பின்னர் அந்த 2 பேர் சிறுமியை மிரட்டி கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.
பயந்துபோன சிறுமியை கடந்த 2 மாதங்களாக ஊழியர்கள் இருவரும் பலமுறை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளனர். இதனால் மனமுடைந்த சிறுமி, நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், இதுகுறித்து கடலோர காவல்படை போலீஸாரிடம் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து 2 ஊழியர்களையும் கைது செய்தனர். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
Discussion about this post