WhatsApp Channel
கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் வௌவால்களால் நிபா வைரஸ் பரவுவது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியபோது அங்கு டெங்கு உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல்கள் பரவியது.
பல்வேறு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர்.
கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் பரவி வருகிறது. நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட 2 பேர் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களின் தொடர்புகளை பரிசோதித்ததில் மேலும் சிலருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் கேரள மாநிலம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.
மாதிரிகள் சேகரிப்பு
கோழிக்கோடு மாவட்டத்தில் சுகாதார நடவடிக்கைகள் மூலம் நிபா வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கோழிக்கோட்டில் நிபா வைரஸ் பரவுவதற்கான காரணத்தைக் கண்டறியும் பணியில் மத்திய சுகாதாரக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள தோட்டங்களில் இருந்து வௌவால்களின் மாதிரிகளை சேகரித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதன்படி, மொத்தம் 12 வவ்வால் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.
வௌவால்கள் மூலம்…
அதில் சில வௌவால்களுக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இது குறித்து கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறுகையில், கோழிக்கோடு பகுதியில் நிபா வைரஸ் பரவுவதற்கு வௌவால்கள் தான் காரணம் என்பது உறுதியாகியுள்ளது, இந்த தகவலை மத்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் உறுதி செய்துள்ளது.
Discussion about this post