WhatsApp Channel
பனையூரில் நள்ளிரவு போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் இல்லம் சென்னை பனையூர் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ளது. அவரது இல்லத்திற்கு அருகில் உள்ள 50 அடி உயர பாஜக கொடிக்கம்பத்தில் இன்று கொடியேற்றும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இத்திட்டத்திற்கு எதிராக இஸ்லாமியர்கள் புகார் செய்திருந்தனர்.
இஸ்லாமியர்களின் புகாரின் பேரில் நெடுஞ்சாலைத்துறையினர் ஜே.சி.பி.யுடன் கொடிக்கம்பத்தை அகற்ற வந்தனர். இந்நிலையில் அங்கிருந்த 500க்கும் மேற்பட்ட பாஜகவினர் கொடி கம்பத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நள்ளிரவில் போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
150க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் சம்பவ இடத்திற்கு வந்து பா.ஜ.,வினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு ஏற்படாததால், பாஜகவினர் கைது செய்யப்பட்டு நீலாங்கரை, பனையூர் பகுதிகளில் உள்ள தனியார் திருமண மண்டபங்களில் அடைக்கப்பட்டனர்.
மெரினா கடற்கரையில் தமிழ் நாட்டு மக்களின் துரோகளை வைக்க அனுமதி ஆனால் பாஜக கொடி கம்பம் வைக்க அனுமதி இல்லை.
Discussion about this post