இந்தியா முழுவதுமிருந்து இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வக்கீல்கள் சீஃப் ஜஸ்டிஸ் என்வி.ரமணாவிற்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
அதில் வெஸ்ட் பெங்காலில் தேர்தலுக்கு பின் நடந்த கலவரங்களை கவனத்தில் கொள்ளுமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.மேலும் SIT(Special investigation team) விசாரணை செய்து வழக்கு பதியுமாறும் வலியுறுத்தி உள்ளனர்.
அந்த கடிதத்தில் மேலும்.. இந்திய அரசியலமைப்புக்கு முரணாக மம்தா தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. மே 2 முதல் அங்கு பெண்களுக்கு எதிரான வன்முறை பாலியல் அத்துமீறல் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. காவல்துறையும் திரிணாமுல் குண்டர்களின் கைப்பாவையாகவே செயல்பட்டு வருகிறது.
பல இடங்களில் நடந்த வன்முறை தாக்குதல்களால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. முதியவர் என்று பாராமல் கூட அடித்துக் கொன்ற அவலம் அங்கே நடைபெறுகிறது..பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவல்துறையே திரிணாமுல் குண்டரகளுக்கு சாமரம் வீசுகிறது.இன்று வரை பாதிக்கப்பட்ட மக்கள் கொடுத்த புகாரின் பேரில் ஒரு வழக்கும் பதியப்படவில்லை என்பது மிகுந்த வேதனைக்குரிய விஷயம்.
இதனை கவனத்தில் கொண்டு வெஸ்ட் பெங்கால் அல்லாத காவல்துறை அதிகாரிகளை கொண்டு தீர விசாரணை நடத்தி சொத்து சேதம் மற்றும் உயிர்பலிகளை கணக்கெடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் மனித உரிமைகள் கழகம் தேசிய குழந்தைகள் உரிமைகள் கழகம் மற்றும் தேசிய பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் உரிமைகள் கழகம் ஆகியவை இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்..மீடியா செய்திகளின் படி
வெஸ்ட் பெங்கால் கலவத்தில் சுமார் 15000 இடங்களில் வன்முறை நடந்தேறியிருக்கிறது. 15க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டனர். 6000 முதல் 8000 வரையிலான மக்கள் சொந்த மாநிலத்திலிருந்து அகதிகளாய் புலம்பெயர்ந்துள்ளனர்.இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் வெஸ்ட் பெங்கால் முழுதும் ரோஹிங்யாக்களே வாழ முடியும்..மம்தாவின் தரம்தாழ்ந்த அரசியலுக்கு நாங்கள் எங்கள் உயிர்களை உடமைகளை இழக்கிறோம் என வெஸ்ட் பெங்கால் மக்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.
உத்தரபிரதேசத்தில் போலே பாபாவின் ஆன்மீக நிகழ்ச்சி ஒன்றில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்தனர். பலியானவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள். யார் இந்த...
கஜகஸ்தானில் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்தார். கஜகஸ்தான் தலைநகர் அஸ்தானாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு நடைபெற்று வருகிறது....
நீட் தேர்வில் முறைகேடு செய்து இளைஞர்களின் எதிர்காலத்துடன் விளையாடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். ராஜ்யசபாவில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி...
மகாராஷ்டிராவில் கர்ப்பிணிகள் உள்ளிட்ட சிலருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மற்றும் புனேவில்...
Discussion about this post