WhatsApp Channel
வரும் லோக்சபா தேர்தலில் எப்படியாவது கரும்பு விவசாயி சின்னத்தை பெற வேண்டும் என்ற உறுதியுடன் நாம் தமிழர் கட்சி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி 2016 சட்டமன்றத் தேர்தல் மூலம் தேர்தல் அரசியலில் களமிறங்கியது. அந்தத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் மெழுகுவர்த்தி சின்னத்தில் போட்டியிட்டனர். தொடர்ந்து 2019 லோக்சபா தேர்தல், 2021 சட்டசபை தேர்தல், நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டது.
இந்த லோக்சபா தேர்தலிலும் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட நாம் தமிழர் கட்சி திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், லோக்சபா தேர்தலில் கர்நாடகாவில் இருந்து பாரதிய பிரஜா ஐக்கிய கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் கமிஷன் ஒதுக்கியது. இதையடுத்து நாம் தமிழர் கட்சி தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டது. ஆனால், நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் வழங்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது.
இதைத் தொடர்ந்து, மக்களவைத் தேர்தலில் கரும்பு விவசாயி சின்னத்தை நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி சீமான் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார். அப்போது, முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் கரும்பு விவசாயி சின்னம் பாரதிய ஜனதா ஐக்கிய கட்சிக்கு ஒதுக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. இதையடுத்து சீமானின் மனுவை எந்த உத்தரவும் பிறப்பிக்காமல் டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி சீமான் உச்ச நீதிமன்றத்தில் இன்று மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக கரும்பு விவசாயி சின்னம் தங்களுக்கு ஒதுக்கப்படவில்லை என்று சீமான் கூறினார். திட்டமிட்டு சதி செய்துள்ளனர்,” என்றார்.
Discussion about this post