WhatsApp Channel
கோவையில் பிரதமர் மோடியின் பேரணி நடத்த மாநகர காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி வரும் 18ம் தேதி கோவை வருகிறார். கோவையில் பிரதமர் மோடி பங்கேற்கும் பிரமாண்ட ரோடு ஷோ (பேரணி) நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது. இந்த ரோடு ஷோ சுமார் 5 கி.மீ. தொலைவில் நடைபெற உள்ளதாகவும், பேரணியின் போது பிரதமர் மோடி பொதுமக்களை சந்திக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் கோவையில் பிரதமர் மோடியின் பேரணி நடத்த மாநகர காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக அனுமதி வழங்க முடியாது என மாநகர போலீஸ் கமிஷனர் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது. இதுகுறித்து மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சிறப்பு பாதுகாப்பு குழு அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.
12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கும், பிரதமருக்கும் உள்நாட்டு, வெளிநாட்டு மதம் மற்றும் பிற தீவிரவாத அமைப்புகளின் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இருப்பதாக கூட்டத்திற்கு பின் போலீசார் விளக்கம் அளித்தனர். பேரணிக்கு வரும் அனைவரும் நுழைவு வாயிலில் நிறுத்தி சோதனை செய்யப்படுவார்கள். ஆனால் சாலையில் 4 கி.மீ. பேரணி நீண்ட தூரம் செல்லும் போது ஒவ்வொரு நபரையும் சோதனை செய்வது கடினம் என்று போலீசார் விளக்கினர்.
பிரதமர் மோடியின் வாகன பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ள நிலையில், பேரணிக்கு அனுமதி கோரிய பா.ஜ.க. நீதிமன்றத்தை நாடியுள்ளது.
Discussion about this post