WhatsApp Channel
மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக அனுஷா ரவி இன்று அறிவித்தார்
கோவையை சேர்ந்த அனுஷா ரவி, மக்கள் நீதி மய்யத்தின் மாநில பிரசார செயலாளராக கடந்த 3 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். மக்கள் நீதி மய்யத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக அனுஷா ரவி இன்று அறிவித்துள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை கட்சி தலைவர் கமல்ஹாசனுக்கு அனுப்பியுள்ளார்.
இந்நிலையில் எம்.என்.எம். அக்கட்சியில் இருந்து விலகிய அனுஷா ரவி பாஜகவில் இணைந்தார்.
மேலும் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் முன்னாள் தலைவர் மூக்கையா தேவர் மகன் முத்துராமலிங்கம், அ.தி.மு.க. முன்னாள் எம்.பி., விஜயகுமார் இன்று பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் இணைந்தார்.
Discussion about this post