படித்தவர்களை விட மக்களுக்காக உணர்வுப்பூர்வமாக உழைக்கக்கூடியவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
கோவை வ.உ.சி பூங்காவில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், எதிர்க்கட்சிகள் பேரவையில் முழுமையாக பேச அனுமதிக்கவில்லை என்றும், சட்டசபையில் அவர்கள் பேசிய வீடியோக்களை கட்டிங் பேஸ்ட் செய்வதாகவும் குற்றம்சாட்டினார்.
தமிழகத்தில் நல்ல தலைவர்கள் வர வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் சொல்வதில் மாற்றுக்கருத்து இல்லை என்றும், அரசியல் தலைவர்களான பிறகு சினிமா நடிகர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றும் வானதி சீனிவாசன் கூறினார்.
Discussion about this post