WhatsApp Channel
என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு விழாவிற்கு வரும் 27ம் தேதி பல்லடத்தில் திரளுமாறு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். எனது மண், எனது மக்கள் நடைபயணம் மூலம் 232 தொகுதிகளைக் கடந்துள்ளோம் என்றார்.
இந்த யாத்திரைக்கு உதவிய பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவித்தார். 2024ல் தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த யாத்திரை பிப்ரவரி 27ஆம் தேதி பல்லடத்தில் நிறைவடையும் என்றும், விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பார் என்றும் அவர் கூறினார். எனவே தமிழக மக்கள் அனைவரும் பல்லடத்தில் ஒன்று திரள வேண்டும் என அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Discussion about this post